தேவையானவை:
முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து) – கால் கிலோ
கேரட் – 1
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
அரைக்க:
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
எப்படி செய்வது?
காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, மைய அரைத்து எடுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுது, வேகவைத்த காய்கறி சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்குங்கள். எளிய செய்முறை அபாரமான சுவை, குறையாத சத்து…இதுதான் இந்த மலபார் அவியலின் சிறப்பு. அடைக்கு சிறப்பான இணை இது!